BRINDARANYA KSHETRA DIVYA DESA SABHA
About BRINDARANYA KSHETRA DIVYA DESA SABHA
அடியேன் ராமானுஜ தாஸன் இந்த சேனலில் வைதீக விஷயங்கள் திவ்ய பிரபந்தம் வேதங்கள் பற்றி பதிவேற்ற படும் இது திருவல்லிக்கேணி ஸ்ரீ ருக்மணி பிராட்டியார் சமேத ஶ்ரீ பார்த்தசாரதி சுவாமியை அடிப்படையாக கொண்டு தொடங்கப்பட்டது மகாபாரதத்தின்படி, கிருஷ்ண பகவான், மகாபாரத போரின்போது அர்ஜுனனின் சாரதியாக இருந்தார். அச்சமயத்தில் அவர் ஸ்ரீமத் பகவத் கீதையை ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு உபதேசித்தார். போரின்போது பீஷ்மரின் அம்புகளால் காயமடைந்த கிருஷ்ணர் முகம் முழுவதும் தழும்புகளுடன் காட்சி அளிக்கிறார். இந்த பெருமாளுக்கு இன்னொரு சிறப்பு என்னவென்றால் இந்த இடத்தில் மட்டும் தான் கிருஷ்ண பகவான் மீசையுடனும், தன் பிரதான ஆயுதமான சுதர்சன சக்கரம் இல்லாமலும் காட்சி தருகிறார். போரின் தொடக்கத்தில் இவர் எந்த ஆயுதமும் ஏந்தாமல் இருப்பதாக வாக்கு கொடுத்ததால் போரின் தொடக்கம் மற்றும் முடிவினை தெரிவிக்கும் சங்கத்தை மட்டும் ஏந்தியுள்ளார். இங்கு உற்சவ மூர்த்தி தன் கதாயுதம் இல்லாமல் செங்கோலுடன் சேவை சாதிக்கிறார் அனைவருக்கும் ஸ்ரீ ருக்மணி பிராட்டியார் சமேத ஶ்ரீ பார்த்தசாரதி சுவாமியின் திவ்ய கடாக்ஷம் அணைவருக்கும் கிட்டட்டும் நமஸ்காரம்.🙏